Tuesday, 11 October 2016

நாராயணசாமியும், சிக்கன் துண்டும்

நாராயணசாமி தமிழ் நாட்டின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, தனக்குக் கொடுக்கப்பட்ட அமைச்சர் பதவியில் திறமையாக செயல்பட்டும் வருபவம்.

ஒரு நாள் மதிய சாப்பாட்டுக்கு எல்லோரும் தன் நண்பர்களுடன் தயார் ஆனார் நாராயணசாமி. அனைவரும் வரிசையாக‌ உட்கார்ந்திருந்தனர்.

நல்ல தலைவாழை இலை போட்டு சாப்பாடு. பரிமாறுகிற இளம்வயது வாலிபன், வரிசையாக எல்லா இலைகளிலும் சிக்கன் துண்டை போட்டுக்கொண்டு வந்தான். ஆனால் நாராயணசாமியைக் கவனிக்காமல் சென்றுவிட்டான்.

நாராயணசாமிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அவனைக் கூப்பிட்டார்.

"ஏய் இங்க வா"

"சார்..."

"உம் பேரு என்ன"

"முருகனுங்க"

"எந்தூரு"

"வாடிபட்டிங்க"

"என்னா படிச்சிருக்க"

"மூணாங் கிளாசுங்க"

உடனே அவனை முறைத்துப் பார்த்த நாராயணசாமி கோபத்துடன் இப்படிச் சொன்னார்,

"இந்த ஆபீஸ்லயே அதிகமா படிச்சவன்ற திமிர்ல ஆடாத. போடா...போய் சிக்கன் கொண்டு வா"

====இதை விஜயகாந்த் வாழ்க்கையில நடந்ததாக்கூட சொல்றாங்க!!!

No comments:

Post a Comment