Sunday, 9 October 2016

நாராயணாசாமியும், மனைவியின் மரணமும்

நாராயணாசாமியின் மனைவி மரணப்படுக்கையில் இருந்தாள்.

அருகில் அமர்ந்திருந்த தன் கணவனைப் பார்த்து,

"என்னங்க, நான் செத்ததும், நீங்க கண்டிப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்" என்றாள்.

"சே, என்ன பேசற நீ? அப்படியெல்லாம் கனவிலும் நடக்காது" என்றார் நாராயணசாமி.

"அப்படி சொல்லாதீங்க...நான் போனதும் காலம் பூராவும் நீங்க தனியா கஷ்டப்படணுமா?"

"உன்னைத் தவிர வேறு யாரையும் நான் நெனச்சுக் கூட பார்க்க மாட்டேன்...."

"கொஞ்சம் யோசிங்க....."

"இல்லை...உன் இடத்துல யாரையும் என்னால பார்க்க முடியாது ... உன் நினைவிலேயே காலத்தை ஓட்டுவேன்...."

"ப்ளீஸ் எனக்காக நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க‌, உங்க புது மனைவிக்கு என் டிரஸ்சை எல்லாம் குடுத்துருங்க"

"முடியாது"

"ஏன்?"

"புரியாமப் பேசாதே ... "அவள்" உன்ன விட கொஞ்சம் குண்டு. உன்னுடைய உடை அவளுக்கு மேட்ச் ஆகாது! "

No comments:

Post a Comment