Sunday, 9 October 2016

நாராயணசாமியும், காரும்

நாராயணசாமி காரோட்டுவதில் நிபுணர்.

ஒரு நாள் நாராயணசாமி வாக்கிங் செல்லும் பொழுது காரைஓட்டுவதுபோல கற்பனையாக‌ ஸ்டீரிங்கை இயக்கிக் கொண்டு காலை ஆக்சிலேடரை மிதிப்பதுபோல பாவனை செய்து கொண்டே நடந்து வந்தார். அவருடன் உதவியாளன் ஒருவனும் நடந்து வந்தான்.

நாராயணசாமியின் வித்தியாசமான நடவடிக்கை கண்டு அங்கு ஒரு
கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. அவருடன் நடந்து வந்த பரிதாபத்துக்குரிய உதவியாளனிடம் கூட்டத்தில் இருந்த‌ ஒருவர் அவனிடம் விசாரிக்க,

அவன் சொன்னான்,

"இவருக்கு கார் ஓட்டுவது என்றால் மிகுந்த ஆசை. நிறையப் போட்டிகளில் கூடக் கலந்து பரிசுகள் வாங்கியிருக்கிறார். துரதிருஷ்ட வசமாக அவருக்கு மன நோய் ஏற்பட்டு விட்டது.அதனால் அவரைக் கார் ஓட்ட விடாமல் தடுத்து வைத்துள்ளனர். என்றாலும் பழக்க தோசத்தின் காரணமாக தினசரி இங்கு இதேபோல வந்து இந்தக் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு பார்க்குக்குப்போவார். பிறகு வந்து காரை எடுத்துசெல்வதுபோல
செல்வார்."

கூட்டத்தில் ஒருவர் கேட்டார்,

"ஏனப்பா,நீயாவது நிலையை அவருக்கு கொஞ்சம் எடுத்து சொல்லி இதைத் தடுக்கப் பார்க்கலாமே?"

உதவியாளன் உடனே படபடப்புடன் சொன்னான்,

"தயவு செய்து சப்தம் போட்டுப் பேசாதீர்கள். அவர் தினசரி காரை நிறுத்துவது போல் செய்து விட்டு என்னிடம் 150 ரூபாய் கொடுத்து நன்றாக சுத்தம் செய்து வைக்க சொல்வார். நானும் அதுபோல நடித்து நூறு ரூபாய் வாங்கி என் பிழைப்பை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அதைக் கெடுத்து விடாதீர்கள்"

No comments:

Post a Comment