Sunday, 9 October 2016

நாராயணசாமியும், அழகு பிசாசும்

நாராயணசாமியின் மனைவி மிகப்பெரிய கொடுமைக்காரி.

அவளிடம் மாட்டிக்கொண்டு அளவில்லா துன்பங்களையெல்லாம்  அனுபவித்து வந்தார் நாராயணசாமி. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் அடங்காமல் இவரை ஆட்டுவித்து வந்தாள்.

இந்த உலகத்தில் பெண்களே இல்லாத இடத்திற்குப் போய் சந்தோஷமாக இருக்க போய்விட வேண்டும். தான் பட்டது போன்ற வேதனையை தன் மகனும் படக்கூடாது என்று நினைத்து தனது ஒரே மகனையும் தன்னோடு எடுத்துக் கொண்டு போய்.... மனிதர்களே இல்லாத ஓர் தீவில் மகனுடன் வாழ்ந்து வந்தா நாராயணசாமி.

வருடங்கள் பல சென்றன.

ஒரு நாள் ஒரு சிறிய கப்பல் அந்த தீவிற்கு வந்தது. அதிலே ஒரு குடும்பம் வந்திறங்கியது அதிலே ஓர் இளம்மங்கை ஒருத்தியும் இருந்தாள். நாராயணாசாமியும்,அவர் மகனும் அங்கே (உடைகள் இல்லாது) வந்த போது அந்த மங்கை இவர்களைக் கண்டதும் பயத்தில் "ஓ...."வென்று கத்தியபடி ஓடத்தொடங்கினாள்.

அவள் ஓடிய சிறிது நேரத்தில் அந்த கப்பலும் தீவினை விட்டு போய்விட்டது.

அதைக் கண்ட மகன் தந்தை நாராயணாசாமியைப் பார்த்துக் கேட்டான்

"நாங்கள் கண்டது என்ன அப்பா?"

"ஓ....அதுவா அது பிசாசு! அந்தப் பிசாசு நம்மைக் கொன்று இரத்ததைக் குடிக்கும்"

"ஆ! அப்படியா" என்றான் மகனும் பயத்துடன்.

அன்றிரவு பாதி தூக்கத்தில் மகன் சொன்னான்.

"அப்பா ... அப்பா அந்த பிசாசு அழகா இருந்தது"

No comments:

Post a Comment