Saturday, 29 October 2016

ஒரு குட்டிப்பொண்ணு தாத்தாவோட பேசிட்டு நடந்து போச்சாம்.
அவரோட கை சுருக்கங்களைப் பார்த்துட்டு..
"தாத்தா உங்க தோல கடவுள் தான் செய்தாரா?" அப்டின்னுச்சு.
"ஆமா"
தன்னோட கைய தொட்டு பாத்துட்டு
"என்னுதையுமா?" அப்டின்னுச்சு.
"ஆமான்டா, ஆனா என்னுத ரொம்ப நாள் முன்னாடி செஞ்சாரு உன்னுத இப்ப தான் செஞ்சாரு"
அது பொறுமையா சொன்னது..
"இப்பல்லாம் கடவுள் நல்லா வேல செய்ய கத்துக்கிட்டாரு இல்ல?"

No comments:

Post a Comment