Wednesday, 5 October 2016

நாவலர் நெடுஞ்செழியன்

திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர். கழகம் கண்ட முக்கிய பேச்சாளர்.

"அன்றே நாங்கள் அண்ணாவிடம் போகாமல் காமராஜரிடம் போயிருந்தால் எங்களை வேண்டாமென்றா சொல்லியிருப்பார்? ( இந்த இடத்தில் அடக்க முடியாத சிரிப்புடன்) ஊமையன்,உளறுவாயனையெல்லாம் கூடவே சேர்த்து வைத்துக்கொண்டிருக்கிற காமராஜர் என்னையும் கருணாநிதியையும் வேண்டாம் என்றா சொல்லிவிடுவார்?” என்று திமுகவில் இருந்து கொண்டே அண்ணாவுக்கு எதிராக கலகம் செய்தவர்.

ஒரு சமயம் கருணாநிதி,"நெடுஞ்செழியன் பெண்டாட்டிக்கு பயப்படுபவர்’ என்று கிண்டல் செய்த போது, "உன்னை மாதிரி எனக்கு என்ன வப்பாட்டியா இருக்கு” என்று பதிலளித்தவர். அதாவது "நான் பொண்டாட்டிக்கு பயப்படுவேன். நீ வப்பாட்டிக்கு பயப்படுபவன்’ என்று அர்த்தம்.

எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்குவதில் கருணாநிதியிடம் கடுமையாக பிடிவாதம் செய்து அவசர, அவ‌சரமாக பத்திரிக்கை நிருபர்களுக்கு எம்ஜிஆர் சஸ்பெண்ட் விஷயத்தை வெளியிட்டவர் இவர்.

மேடையில் பேசும்போது விரல்களை ஆட்டி எம்ஜிஆர் பற்றி, “வாழ வந்தாய். எங்கோ கண்டியில் பிறந்தாய். மலையாளி. வாழ வந்தாய். வாழ்ந்து விட்டுப் போ. எங்களை ஆள நினைக்கலாமா?” என ஆக்ரோஷமாக கேட்டதுடன்,

"அடுத்தவன் மனைவியை அவன் மனம் பதற,பதற, அவன் கதற,கதற தூக்கிக்கொண்டு வந்த எம்.ஜி.ராமச்சந்திரனா எங்களை கணக்கு கேட்பது” என்றும் சூடு கிளப்பியவர்.

இதில் சிறப்பான விசயம் என்னவென்றால், அண்ணாத்துரை மந்திரி சபையிலும், கருணாநிதி மந்திரி சபையிலும், எம்.ஜி.ஆர் மந்திரிசபையிலும், கடைசியாக ஜெயலலிதா மந்திரிசபையிலும் கூட இரண்டாமித்தை அலங்கரித்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு.

No comments:

Post a Comment