Friday, 28 October 2016

'நடிகவேள்' எம்.ஆர்.ராதா

சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டி னால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா… எவருக்கும் அஞ்சாத ராஜா!
மதராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் என்பதன் சுருக்கம்… எம்.ஆர்.ராதா. ஜெர் மன் போர்க்கப்பலான எம்டன் சென்னை யில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்ப தால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடி ச்சம்பவங்கள் நிறைய!
அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத் தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியான வர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாக வைத்து இருப் பார் ராதா!
சின்னவயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளி யில் படிக்க மனம் இல்லை. நான் ஓர் அநாதை என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத் த ங்கா ள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறி யது முதல் அனுபவம் ‘நாடகத்தில் நடி க்கச் சொல்லிக் கொடுத்தது ஜெகநாதய் யர் தான் என்பார்!
எம்.ஆர். ராதா நடித்த முதல் படம் ‘ராஜ சேகரன்ய (1937), கடைசிப் படம் பஞ்சா மிர்தம்ய (1979), சினிமா வாய்ப்பு கிடை த்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடு வார்கள். ஆனால், சினிமா – நாடகம் இர ண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்!
உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லி, அரி வாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டுவதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திரா விடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டி விட்டுத் தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!
ரத்தக்கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கே ற்றப்பட்ட து. தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட் சுமி காந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டு ள்ளன!
ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப்பல கார் களை வைத்திருந்தார். இம் பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப்பலரும் ஆச்சர்யப் பட்டார்கள்.
‘நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயி ன்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப்போக முடியும்? என்று கேட்டார்!
நாடகம் நடந்துகொண்டு இருக் கும்போது செருப்பு, கல், அழு கிய முட்டை போன்றவை எதி ரிகளால் வீசப்படுவது வாடிக் கை அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பா ர். ‘நேற்றுபேடிகள் விட்டுச் செ ன்ற சாமான்கள் என்று அதில் எழுதிவைப்பார்!
எம்.ஜி.ஆரை ‘ராமச்சந்திரா என்றும், சிவாஜியை ‘கணேசா என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!
இவரது நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் விவாதத் துக்கு வந்தபோது டவுசர், பணியனோடு சபை வளா கத்துக்குப் போய் விட்டா ர். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதை யே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்!
என்.எஸ். கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர் பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, ‘நண்பன் கையால் சாகக் கொடுத்து வைத்திருக்கணும்’
என்று என்.எஸ்.கே சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா.திருப்பதி கோயிலுக்கு குண்டு வைக்கப் போய் வெடி மருந் தைக் காயவைத்து, அது வெ டித்துச்சிறுவிபத்தான சம்ப வமும் உண்டு!
எம்.ஜி.ஆரை அவரது ராமா வரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதா கப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்ட னை தரப்பட்டது.
‘நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக் கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை… ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது? என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!
நான்கரை ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார் அவர் மீது ஆர்வம்கொண்டவராகக் காட்டிக் கொண்ட கைதி ஒருவர், ஒருநாள் சமையல் செய்து கொடுத்தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பி ட்டதும் சுருண்டு விழுந்து செத்துப்போ னது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம் கலக்கப்பட்டு இருந்தது பின்னால் தெரிய வந் தது!
‘அடியே காந்தா… ஃபாரின்ல நீராவியில் கப்பல் விடுறான்… நீங்க நீராவியில புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்கய,
‘ஊருக்கு ஒரு லீடர்… அவனவனுக்குஒரு கொள்கை. அவனவனுக் கு ஒரு பட்டினிப் பட்டாளம்…. நான்சென்ஸ் இப்படி ராதாவின் வார் த்தைகளைவைத்தே மிமிக்ரி நடிகர் ஆனவர்கள் அதிகம்!
ராமாயணத்தை அதிகப்படியாகக் கிண்டலடி த்தவர். ‘கீமாயணம் என்று நாடகம் போட்டார். ராமன் வேடத்தில் இருக்கும் போதே கைது செய்தார்கள். பக்தர்கள் மனம் புண்படுகிறது என்று வழக்குப் போட்டார்கள். மனம் புண்படு பவர்கள் யாரும் வர வேண்டாம்’
என்று விளம்பரம் கொடுத்தார்! ‘நீங்கள் எதில் அதிக இன்பம் காண்கிறீர்கள்? என்று கேட்டபோது. எதிர்ப்பில்தான்,
மக்கள் எதை விரும்புகிறார்களோ…அதை எதிர்ப்பதுதான் என் பழக்கம்‘என்றார்!
ராதாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. எவ்வ ளவு நீளமான வசனங்களாக இருந்தாலும், யாராவது வாசித்தால் அப்படியே மனதுக்கு ள் ஏற்றிக்கொள்வார். அவர் சொல்லச் சொல் ல எழுதப்பட்டவை சிறு சிறு வெளியீடு களாக அந்தக் காலத்தில் வெளிவந்தன.
ரத்தக் கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன் னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட் டும் போ துமா, பெரிய இடத்துப்பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்துகாட்டிய படங்கள், 118 படங்கள் நடித்த ராதா 1963-ம் ஆண்டில் சாதனையாக 22 படங்கள் நடித்தார்!
மு.கருணாநிதி என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்தவரை ‘கலைஞர் கருணாநிதி என்று அழைத்துப்பட்டம் கொடுத்த வர்.
‘நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும் என்று கலைஞரும் பாராட்டி இருக்கிறார்!

No comments:

Post a Comment