காய்ச்சல் அதிகமாகும் போது சிலருக்கு குளிர் நடுக்கம் ஏற்படும். இதனை நிறுத்த ஒரு தேக்கரண்டி சீரகத்தை வெற்றிலையில் வைத்து மடித்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் குளிர் நடுக்கம் கட்டுப்படும்.
சாப்பிட்டதும் அஜீரணம் ஏற்படுகிறதா? அப்படி அஜீரணக் கோளாறு காரணமாக அவதிப்படுபவர்கள் சுக்கு, மல்லி, பனை வெல்லம் சேர்த்து சுக்குக் காபி குடித்து வந்தால் அஜீரணம் குணமாகிவிடும்.
உங்கள் மீது வியர்வை நாற்றம் வருகிறதா. இதைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து, பின்னர் அதில் குளித்தால் நாற்றமடிக்காது.
வெந்தயக்கீரை இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிக்கிறது. மேலும் வயிற்றுப் புண் இருந்தால் வெந்தயக் கீரை சாப்பிடலாம். கண்ணிற்கு மிகவும் நல்லது.
எலுமிச்சை பழச்சாறில் உள்ள பொட்டாஷியம் சத்து இதய பிரச்சினைகளை தடுக்கும்.
எலுமிச்சை பழச்சாறில் உள்ள பொட்டாஷியம் சத்து இதய பிரச்சினைகளை தடுக்கும்.
No comments:
Post a Comment