Sunday, 9 October 2016

நாராயணசாமியும், புலனாய்வு நிறுவனமும்

ஒரு புலனாய்வு நிறுவனம் நேர்முகத் தேர்வுக்கு மண்ணுசாமி, சுப்புசாமி, நாராயணசாமி ஆகிய மூன்று பேரையும் அழைத்திருந்தது.

மண்ணுசாமி அலுவலகத்துக்குள் போனதும் அவரிடம் ஒரு துப்பாக்கி கொடுக்கப்பட்டது.

"இதோ பாருங்க எங்களோட ஊழியராக இருக்கணும்னா நீங்க எங்களுக்கு
விசுவாசமா, நாங்க சொல்ற எதையும் கேட்கற ஆளா இருக்கணும் உங்க மனைவி பக்கத்து ரூம்ல இருக்காங்க போய் அவங்களை இந்தத் துப்பாக்கியால சுட்டுக் கொன்னுட்டு வாங்க" என்றார்கள் இன்டர்வியூ கமிட்டியில் இருந்தவர்கள்.

மண்ணுசாமி துப்பாக்கியை எடுத்தார். ஆனால் அடுத்த நிமிஷமே,

"சாரி... என்னால என் மனைவியைக் கொல்ல முடியாது" என்று துப்பாக்கியைத் தந்துவிட்டுக் கிளம்பி விட்டார்.

இரண்டாவதாக சுப்புசாமி வந்தார். அவரிடமும் அதே கட்டளை துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு தனது மனைவி இருந்த அறை வரைக்கும் போனவர் மனசு தாங்காமல்,

"எனக்கு என் பெண்டாட்டிதான் வேணும் ஆளை விடுங்க" என்று ஜகா வாங்கிவிட்டார்.

மூன்றாவது வந்த நாராயணசாமியிடம் இதே விஷயம் சொல்லப்பட துப்பாக்கியோடு அவரது மனைவி இருந்த அறைக்குள் நுழைந்து விட்டார்.


சிறிது நேரத்தில் அறையிலிருந்து அந்தப் பெண்ணின் அலறல் கிளம்பியது. இன்டர்வியூ கமிட்டிக்காரர்கள் ஒடிப்போய் பார்த்தபோது அங்கே தன் மனைவியைத் துப்பாக்கிக் கட்டையால் அடித்துக் கொண்டிருந்தார் நாராயணசாமி.

"ஏம்பா இப்படி அடிக்கிறே ?" என்று தேர்வுக்குழு கமிட்டியினர் கேட்டபோது,

நாராயணசாமி சொன்னார்,

"துப்பாக்கியில குண்டு நிரப்பாம கொடுத்து இருக்கீங்களே சார், சனியனை அடிச்சே கொல்ல வேண்டியிருக்கு"

No comments:

Post a Comment