Tuesday, 11 October 2016

நாராயணசாமியும் உடம்பு இளைக்க வைத்தியமும்

நாராயணசாமி தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார். அப்போது நாளிதழில் வந்த ஒரு( கிழ்கண்ட ) விளம்பரம் அவரை கவர்ந்தது

“ மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு!

1.) சாதா உடற் இளைப்பு –ரூ 1,000/- ஒரு மணி நேரம் ( 2 - 5 கிலோ வரை)

2.). சூப்பர் ட்ரிம்மர் - ரூ 2,000/- இரண்டு மணி நேரம் ( 6-10 கிலோ வரை)

3.) ஹெவி ட்ரிம்மர் - ரூ 3,000/- மூன்று மணி நேரம் ( 11 – 15 கிலோ வரை )

4.) அல்டிமேட் ட்ரிம்மர் - ரூ 10,000/- கால வரையரை இல்லை ( எடை வரையரை இல்லை )

முன்பதிவிற்க்கு முந்துங்கள் :

நாராயணசாமி அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்ச்சி செய்து பார்த்துவிடுவது என முடிவேடுத்தார்.

ஆனாலும் முதலில் சாதா முறையில் முதலில் பரிச்சிக்க விரும்பி அதற்க்கான பணத்தை கட்டினார். அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார் அந்த அறை 16 x 16 என்ற அளவில் இருந்தது அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார் அவரூடைய கையில் ஒரு அட்டை அதில் “ ஒரு மணி நேரத்திர்க்குள் என்னை துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம் “ என்று எழுதியிருந்தது. நாராயணாசாமி அந்த பெண்னை துரத்த ஆரம்பித்தார் – அவருக்கு எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது – அவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கனிசமாக குறைந்தது.

முழு திருப்தியுடன் அதற்கு அடுத்த முறையை பரிட்சிக்க விரும்பினார். இந்த முறையில் வித்யாசம் அறையின் அளவு 40x40, சாதா முறையைவிட நல்ல அழகான பெண். கால அவகாசம் 2 மணி அவ்வளவுதான், மற்றபடி முறை ஒன்றுதான். இங்கும் அவருக்கு முழுதிருப்தி.

மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார். வித்யாசம் அறையின் அளவு 75x75 , மிக அழகான பெண் , கால அவகாசம் 3 மணி நேரம். நாராயணாசாமி கணிசமாக எடை குறைந்திருந்தார்.

அவருக்கு எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம். கடைசியாக அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார். அதற்க்கான பணத்தையும் கட்டினார்.

வரவேர்ப்பாளர் அவரிடம் 16 வது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார்.

நாராயணாசாமியும் தான் அடையப்போகும் சந்தோசத்தை எண்ணியவரே கஷ்டப்பட்டு 16 மாடிக்கு வந்தார். அங்கு அவர் 42 வது மாடிக்கு 15 நிமிடத்திற்க்குள் ஓடி வந்து சேர வேண்டும். அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது.

நாராயணாசாமிக்கு வேறு வழியும் இல்லை. தான் கானப்போகும் மிக மிக அற்ப்புதமான அனுபவத்தை நினைத்தவாரே உயிரைக் கொடுத்து ஓடி 42 வது மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார்.

அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி அதன் அளவு சுமார் 500x500 அடி பரப்பளவு இருக்கும். அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான்.

அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது,

நாராயணாசாமி மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார்.

அங்கே ஒரு பெரிய கொரில்லா குரங்கு வாசக அட்டையுடன் அமர்ந்திருந்தது.

"நான் உன்னை துரத்திப் பிடித்தால் , என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன்"

No comments:

Post a Comment