நாராயணசாமியும் அழகும்
"ஏங்க... எங்கே போறீங்க?"
அவரசமாக கிளம்பிக் கொண்டிருந்த நாராயணசாமியை கேட்டாள் அவர் மனைவி.
"ஏதோ இன்னைக்கு பந்தாமே ... பஸ்ஸு, ரயிலு எதுவும் ஓடாதாம் ... எல்லா கடையும் பூட்டித்தான் இருக்குமாம் ... டாஸ்மாக் தவிர "
"அதுக்கு?"
"அதுக்குன்னா...போயி அவங்களாவது ஒழுங்கா வேலை செய்றாங்களான்னு பார்த்துட்டு வர்றேன்டி"
"நீங்க
ஒண்ணையும் புடுங்க வேண்டாம் ... ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே,
அவளுக்கு சீக்கரமா அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கணும் ... தரகரைப்
பார்த்து விசாரிச்சிட்டு வாங்க"
" நான் ஏற்கனவே சொல்லி வச்சிருக்கேண்டி...அறிவா,அழகா லட்சணமா ஒரு மாப்பிள்ளை கிடைக்கிற வரைக்கும் நம்ம பொண்ணு காத்திருக்கட்டும்"
"எங்கப்பா அப்படியா காத்திருந்தார்?"
" !!! "
No comments:
Post a Comment