சிரம் தாழ்த்த வேண்டியவள் அல்ல
சிரம் தாழந்து வணங்க வேண்டியவள்
சிரம் தாழந்து வணங்க வேண்டியவள்
துன்பமாம் பூகம்பங்கள் சூழும் வேளை
பூக் கம்பம் இல்லை அவள்
பூக் கம்பம் இல்லை அவள்
புயலால் வீழ்ந்து போக அவள் மரமில்லை
பூமியே தடம் புரண்டு போனாலும் வெடித்து
முளைக்கும் நாணல் அவள்
பூமியே தடம் புரண்டு போனாலும் வெடித்து
முளைக்கும் நாணல் அவள்
தேள் கொட்டும் சமுதாயத்தில் அவள்
தேன் இல்லை
தேன் இல்லை
அவள் ஓர் குட்டையில் வாழும் மீனுமில்லை
எப்போதும் ஆண் போடும் துாண்டிலை சேர்வதற்கு
எப்போதும் ஆண் போடும் துாண்டிலை சேர்வதற்கு
கண்ணீரே காவியமானாலும் கரையாதவள்
எரிந்திடும் கல்லில் சிலை வடிப்பவள்
எரிந்திடும் கல்லில் சிலை வடிப்பவள்
தாய்மையின் மகத்துவம் அறிந்தவள்
தன் வயிற்றுள் கருவை தன்னை விட
பாதுகாப்பவளே தவிர அதை அழிப்பவள் அல்ல பெண்
தன் வயிற்றுள் கருவை தன்னை விட
பாதுகாப்பவளே தவிர அதை அழிப்பவள் அல்ல பெண்
நாணத்தால் தலை குனிவாளே அன்றி
வெட்கித்து அல்ல
வெட்கித்து அல்ல
தீமையை கண்டால் மூழ்குபவளும் அல்ல
விரண்டோடுபவளும் அல்ல
விரட்டி அடிப்பவளே பெண்.
விரண்டோடுபவளும் அல்ல
விரட்டி அடிப்பவளே பெண்.
#eSTHER SABI
No comments:
Post a Comment