Sunday, 9 October 2016

நாராயணசாமியும், மகளின் சுயம்வரமும்

நாராயணசாமி அந்த ஊரிலேயே மிகப்பெரிய பணக்காரர்.

அவருக்கு ஒரே ஒரு திருமண வயதை அடைந்த செல்ல மகள். அவளை மணமுடித்து கொடுக்க வேண்டி சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் நாராயணசாமி.

பல ஊர்களிலிருந்தும் பலப்பல வாலிய வயோதிக அன்பர்கள் சுயம்வரத்தில் கலந்து கொண்டு நாராயணசாமியின் மகளை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வந்து இறங்கியிருந்தனர். 

சுயம்வரம் நடைபெறுகிற நாள்.

என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

சுயம்வரத்திற்காய் நாராயணசாமி வீட்டில் காத்திருந்த மணம‌கன்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினார்கள்.

நாராயணசாமிக்கோ பேரதிர்ச்சி. துக்கம் தொண்டையை அடைக்க தன் உதவியாளரைக் கேட்டார்,

"என் மகளின் சுயம்வரத்தில் கலந்து கொண்டு மணமகனாகும் ஆர்வத்தில்தானே வந்திருந்தார்கள் இந்த‌ இளைஞர்கள் ... இப்போது என்ன நடந்தது ... ஏன் இப்படி தலை தெறிக்க ஓடுகிறார்கள் ... அவர்கள் என் மகளை பார்க்கவில்லையா"

உதவியாளர் அமைதியாகச் சொன்னார்,

"உங்க மகளை பார்த்ததுக்கு அப்புறம்தான் இப்படி ஓடறாங்க!"

No comments:

Post a Comment