Sunday, 9 October 2016

நாராயணசாமியும், குழந்தைகளும்

ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாய் பணிபுரிந்து வந்தார் நாராயணசாமி.

அவர்ருக்கு திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே குழ‌ந்தை பிறக்கிறது. உடனே, அவர் நிர்வாகத்திடம் சம்பள உயர்வு கேட்டார்.

நிர்வாகமும் இது நியாயமானதே என்று ஒப்புக் கொண்டது. அடுத்த குழ‌ந்தை பிறந்தவுடன் மீண்டும் அதிகாரி சம்பள உயர்வுக்கு விண்ணப்பித்தார். மீண்டும் நிர்வாகம் ஒத்துழைத்தது.

பல வருடங்கள் கழித்து அதிகாரி 8 குழந்தைகள் பெற்ற பின்பு நிர்வாகம் செலவுகள் அதிகமாவதை தடுக்க கூட்டம் ஒன்றை போட்டு,

"கொஞ்சம் கண்ட்ரோலா இருக்கணும், இப்படியே போச்சுனா தாங்காது" என அந்த நாராயணசாமியிடம் சொல்லியது..

உடனே நாராயணசாமி கோபமாக,

"குழ‌ந்தை பிறப்பது ஆண்டவன் செயல்" என்றார்.

உடனே கூட்டத்தில் இருந்த மூத்த அதிகாரி சொன்னார்,

"மழையும், வெய்யிலும், பனியும் கூடத்தான் கடவுளோட செயல், ஆனா நாம ரெயின் கோட், குடை வைத்துக் கொள்கிறோமே"

No comments:

Post a Comment