பிரார்த்தனைக்கு வந்திருந்தவர்களிடம் பாதிரியார் ஒரு கேள்வி கேட்டார்.
"இந்த கூட்டத்தில் இருப்பவர்களில் யார் யார் எல்லாம் சொர்கத்திற்கு போக விரும்புகின்றீர்கள்? ... எல்லோரும் எழுந்திருங்கள்"
மிகவும் சோர்வாக இருந்த ஒருவன் தூங்கி விட்டான். அவனை தவிர அனைவரும் எழுந்து நின்றனர்....
பிறகு பாதிரியார் சொன்னார்,
"அனைவரும் அமருங்கள்.. இப்போது நரகத்திற்கு போக விரும்புபவர்கள் எல்லோரும் எழுந்திருங்கள்... " என்று.
அனைவரும் உட்காரும் சத்தம் கேட்டு, தூங்கிக் கொண்டிருந்தவன் மட்டும் எழுந்து நின்றான்.
அவனை பார்த்து ஆச்சிரியப்பட்ட பாதிரியார் கேட்டார்,
"உண்மையாக இது தான் உங்கள் விருப்பமா?"
தூக்கத்தில் எழுந்தவன் திரு திரு என்று முழித்தபடி சொன்னான்,
"பாதர்.. நீங்கள் எதை பற்றி கேட்கின்றீர்கள் என்று தெரியவில்லை ... ஆனால், நீங்களும் நானும் மட்டுமே நின்றுகொண்டிருக்கிறோம் ... உங்களுக்கு எப்போதும் நான் துணையிருப்பேன்"
No comments:
Post a Comment