Friday, 28 October 2016

ஒரு ஞானியைத் தேடி வந்த இளைஞன் அவரிடம்,

''நான் உங்களுக்கு சீடனாக விரும்புகிறேன்.அதற்கான தகுதி என்னிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.''

ஞானி :உள்ளே வா,இப்போது உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது.

இளைஞன் :சொல்லுங்கள்,செய்யக் காத்திருக்கிறேன்.

ஞானி :கொஞ்ச நேரம் என் உடம்பில் ஏறி மிதிக்க வேண்டும்.

இளைஞன் :நீங்கள் பெரிய ஞானி.உங்கள் கால் தூசுக்கும் நான் ஈடாக மாட்டேன்.உங்கள் மேல் என் கால் படுவதா?

ஞானி :இப்போது எனக்கு உடல் வலி....

இளைஞன் :அதற்காக என் உயிரை வேண்டுமானாலும் தருகிறேன்.ஆனால் உங்கள் புனிதமான உடலை நான் மிதிக்க மாட்டேன்.

ஞானி :என் உடலை மிதிக்க நீ மறுக்கிறாய்.ஆனால் என் வார்த்தைகளை மிதிக்கிறாய்.குருவை மதிப்பவனாக நீ எப்படி ஆக முடியும்?

இளைஞன் குழம்பினான்.

குரு தெளிவுபடுத்தினார்;

மரியாதைக் குறைவாகத் தோன்றும் செயல்கள் எல்லாம் மரியாதைக் குறைவான செயல்கள் அல்ல.

No comments:

Post a Comment