வாரும் வள்ளுவரே
மக்கட் பண்பில்லாதவரை
என்ன சொன்னீர்?
மரம் என்றீர்
மரம் என்றால் அவ்வளவு
மட்டமா?
மக்கட் பண்பில்லாதவரை
என்ன சொன்னீர்?
மரம் என்றீர்
மரம் என்றால் அவ்வளவு
மட்டமா?
வணக்கம் ஔவையே
நீட்டோலை வாசியான்
யாரென்றீர்?
மரம் என்றீர்
மரம் என்றால் அத்தனை இழிவா?
நீட்டோலை வாசியான்
யாரென்றீர்?
மரம் என்றீர்
மரம் என்றால் அத்தனை இழிவா?
பக்கத்தில் யாரது
பாரதிதானே
பாஞ்சாலி மீட்காத
பாமரரை என்னவென்றீர்?
நெட்டை மரங்கள் என்றீர்
மரங்களென்றால் அவ்வளவு கேவலமா?
பாரதிதானே
பாஞ்சாலி மீட்காத
பாமரரை என்னவென்றீர்?
நெட்டை மரங்கள் என்றீர்
மரங்களென்றால் அவ்வளவு கேவலமா?
மரம்
சிருஷ்டியில் ஒரு சித்திரம்
பூமியின் ஆச்சரியக்குறி
நினைக்க நினைக்க நெஞ்சூறும் அனுபவம்
சிருஷ்டியில் ஒரு சித்திரம்
பூமியின் ஆச்சரியக்குறி
நினைக்க நினைக்க நெஞ்சூறும் அனுபவம்
விண்மீனுக்குத் தூண்டில்போடும்
கிளைகள்
சிரிப்பை ஊற்றிவைத்த
இலைகள்
உயிர் ஒழுகும்
மலர்கள்
கிளைகள்
சிரிப்பை ஊற்றிவைத்த
இலைகள்
உயிர் ஒழுகும்
மலர்கள்
மனிதன் தரா ஞானம்
மரம் தரும் எனக்கு
மனிதன் தோன்றுமுன்
மரம் தோன்றிற்று
மரம் நமக்கண்ணன்
அண்ணனைப் பழிக்காதீர்
மரம் தரும் எனக்கு
மனிதன் தோன்றுமுன்
மரம் தோன்றிற்று
மரம் நமக்கண்ணன்
அண்ணனைப் பழிக்காதீர்
மனித ஆயுள்
குமிழிக்குள் கட்டிய கூடாரம்
மரம் அப்படியா..?
குமிழிக்குள் கட்டிய கூடாரம்
மரம் அப்படியா..?
வளரும் உயிர்களில்
ஆயுள் அதிகம் கொண்டது
அதுவேதான்
ஆயுள் அதிகம் கொண்டது
அதுவேதான்
மனித வளர்ச்சிக்கு
முப்பது வந்தால்
முற்றுப்புள்ளி
முப்பது வந்தால்
முற்றுப்புள்ளி
மரம்
இருக்கும்வரை பூப்பூக்கும்
இறக்கும்வரை காய்காய்க்கும்
இருக்கும்வரை பூப்பூக்கும்
இறக்கும்வரை காய்காய்க்கும்
வெட்டி நட்டால்
கிளை மரமாகுமே
வெட்டி நட்டால்
கரம் உடம்பாகுமா?
கிளை மரமாகுமே
வெட்டி நட்டால்
கரம் உடம்பாகுமா?
மரத்தை அறுத்தால்
ஆண்டு வளையம்
வயது சொல்லும்
மனிதனை அறுத்தால்
உயிரின் செலவைதான்
உறுப்பு சொல்லும்
ஆண்டு வளையம்
வயது சொல்லும்
மனிதனை அறுத்தால்
உயிரின் செலவைதான்
உறுப்பு சொல்லும்
மரத்திற்கும் வழுக்கை விழும்
மறுபடி முளைக்கும்
நமக்கோ
உயிர் பிரிந்தாலும்
மயிர் உதிர்ந்தாலும்
ஒன்றென்றறிக
மறுபடி முளைக்கும்
நமக்கோ
உயிர் பிரிந்தாலும்
மயிர் உதிர்ந்தாலும்
ஒன்றென்றறிக
மரங்கள் இல்லையேல்
காற்றை எங்கேபோய்ச்
சலவை செய்வது?
காற்றை எங்கேபோய்ச்
சலவை செய்வது?
மரங்கள் இல்லையேல்
மழைக்காக எங்கேபோய்
மனுச் செய்வது?
மழைக்காக எங்கேபோய்
மனுச் செய்வது?
மரங்கள் இல்லையேல்
மண்ணின் மடிக்குள்ளே
ஏதப்பா ஏரி?
மண்ணின் மடிக்குள்ளே
ஏதப்பா ஏரி?
பறவைக்கும் விலங்குக்கும்
மரம்தரும் உத்தரவாதம்
மனிதர்நாம் தருவோமா?
மரம்தரும் உத்தரவாதம்
மனிதர்நாம் தருவோமா?
மனிதனின் முதல் நண்பன்
மரம்
மரம்
மரத்தின் முதல் எதிரி
மனிதன்
மனிதன்
ஆயுதங்களை மனிதன்
அதிகம் பிரயோகித்தது
மரங்களின் மீதுதான்
அதிகம் பிரயோகித்தது
மரங்களின் மீதுதான்
உண்ணக்கனி - ஒதுங்க நிழல்
உடலுக்கு மருந்து - உணர்வுக்கு விருந்து
அடையக்குடில் - அடைக்கக் கதவு
அழகு வேலி - ஆடத்தூளி
தடவத் தைலம் - தாளிக்க எண்ணெய்
எழுதக் காகிதம் - எரிக்க விறகு
மரந்தான்
மரந்தான்
எல்லாம் மரந்தான்
உடலுக்கு மருந்து - உணர்வுக்கு விருந்து
அடையக்குடில் - அடைக்கக் கதவு
அழகு வேலி - ஆடத்தூளி
தடவத் தைலம் - தாளிக்க எண்ணெய்
எழுதக் காகிதம் - எரிக்க விறகு
மரந்தான்
மரந்தான்
எல்லாம் மரந்தான்
மறந்தான்
மறந்தான்
மனிதன் மறந்தான்
பிறந்தோம்
தொட்டில்
மரத்தின் உபயம்
மறந்தான்
மனிதன் மறந்தான்
பிறந்தோம்
தொட்டில்
மரத்தின் உபயம்
எழுதினோம்
பென்சில் பலகை
மரத்தின் உபயம்
மணந்தோம்
மாலை சந்தனம்
மரத்தின் உபயம்
பென்சில் பலகை
மரத்தின் உபயம்
மணந்தோம்
மாலை சந்தனம்
மரத்தின் உபயம்
புணர்ந்தோம்
கட்டில் என்பது
மரத்தின் உபயம்
கட்டில் என்பது
மரத்தின் உபயம்
துயின்றோம்
தலையணைப் பஞ்சு
மரத்தின் உபயம்
தலையணைப் பஞ்சு
மரத்தின் உபயம்
நடந்தோம்
பாதுகை ரப்பர்
மரத்தின் உபயம்
இறந்தோம்
சவப்பெட்டி பாடை
மரத்தின் உபயம்
பாதுகை ரப்பர்
மரத்தின் உபயம்
இறந்தோம்
சவப்பெட்டி பாடை
மரத்தின் உபயம்
எரிந்தோம்
சுடலை விறகு
மரத்தின் உபயம்
சுடலை விறகு
மரத்தின் உபயம்
மரந்தான்
மரந்தான்
எல்லாம் மரந்தான்
மரந்தான்
எல்லாம் மரந்தான்
மறந்தான்
மறந்தான்
மனிதன் மறந்தான்
மனிதா
மனிதனாக வேண்டுமா
மரத்திடம் வா
மறந்தான்
மனிதன் மறந்தான்
மனிதா
மனிதனாக வேண்டுமா
மரத்திடம் வா
ஒவ்வொரு மரமும்
போதிமரம்
போதிமரம்
No comments:
Post a Comment